இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்தது.
மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக வீசிய அஸ்வின் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் இன்னிங்சிலும் 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளதால் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஒதுக்கப்பட்டு வந்தாலும் டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக விளையாடி வரும் அஸ்வின் பல சாதனைகளை படைத்து வருகிறார். அந்த வகையில் இந்த போட்டியில் எடுத்த 6 விக்கெட் மூலம் 28 இன்னிங்ஸ்களில் இதுவரை 5 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்தியாவில் அஷ்வின் 22வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் சொந்த மண்ணில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்தியதில் ஆண்டர்சனின்(22 முறை) சாதனையை சமன் செய்தார் அஷ்வின்.
சொந்த மண்ணில் அதிகமுறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் முத்தையா முரளிதரன்(45), ரெங்கனா ஹெராத்(26), அனில் கும்ப்ளே(25) ஆகிய மூவருக்கு அடுத்த 4வது இடத்தில் உள்ளார் அஷ்வின். கும்ப்ளே ஹெராத்தை அஷ்வின் முந்திவிடுவார். ஆனால் முரளிதரனை முந்துவது சாதாரண காரியமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.