2011 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் ஆடியது மோசம் – நெஹ்ரா வெளிப்படை

Sachin-1
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக உலக கோப்பை போட்டிகள் என்றால் ரசிகர்களை விட வீரர்களுக்கு தான் பதற்றம் அதிகம் தொற்றிக்கொள்ளும். அரசியல் சூழ்நிலை காரணமாக கடந்த பல ஆண்டுகளில் ஒரு சில வீரர்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் விளையாடாமல் விலகிக் கூட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pak

- Advertisement -

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றது . இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் அடித்தார் ஆனால் அந்த ஆட்டம் அவரது சரியான ஆட்டம் இல்லை என்று தற்போது கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா. அவர் கூறுகையில்…

சச்சின் டெண்டுல்கர் ஆடிய அந்த ஆட்டத்தில் அவருக்கு பல அதிர்ஷ்டம் கிடைத்தது. அவர் 40 ரன்கள் எடுத்த நேரத்தில் பல கேட்ச் கோட்டை விடப்பட்டது. அந்த போட்டியில் அழுத்தத்தை எப்படி கையாண்டு வெற்றி பெறுகிறோம் என்பதுதான் பெரிய விஷயம். டெண்டுல்கருக்கு அந்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த ஆட்டத்தை அவர் சரியாக ஆடவில்லை.

sachin

அவருக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருந்ததால் 85 ரன்கள் எடுத்தார் என்று கூறியுள்லார் ஆஷிஷ் நெஹ்ரா. இந்த போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை அப்போட்டியை கண்டவர்கள் தெரிந்திருக்க முடியும்.

Sachin 2

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை தொடரில் மோதியபோது பாகிஸ்தான் அணி வென்றதே இல்லை. தற்போது வரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 8 போட்டிகளிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement