ஐ.பி.எல் நடக்காது. அப்போ டி20 உலகக்கோப்பை என்ன ஆகும் ? – பி.சி.சி.ஐ பொருளாளர் கருத்து

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் அமோகமான வரவேற்பினால் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் ஐ.பி.எல் நடைபெறுவது குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

staripl

- Advertisement -

மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ தலைமை முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்க்கு பேட்டியளித்துள்ள கங்குலி ஐபிஎல் தொடர் குறித்து கூறுகையில் : நாங்கள் ஒவ்வொரு முன்னேற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்கு என்ன இருக்கிறது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே சிக்கி தவிக்கிறார்கள் அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

IPL-1

இதனால் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை மே மாதம் நடுப்பகுதி வரை இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒருவேளை ஐ.பி.எல் நடத்த முடிவு எடுக்கப்பட்டாலும் வீரர்களை எங்க இருந்து வர வைப்பீர்கள். வீரர்கள் ஒவ்வொரு மைதானத்திற்கும் எப்படி பயணம் செய்வார்கள் ? இந்த நேரம் உலகில் எந்த ஒரு விளையாட்டிற்க்கும் சாதகமாக இல்லை. எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடரை மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடரி அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி இன்று வெளியான அறிக்கையின்படி இந்தியாவில் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பி.சி.சி.ஐ அதனை கணக்கில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Cup

இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி t20 உலகக் கோப்பை குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் கூறியதாவது : இப்போது எதிர்காலம் குறித்த காட்சிகளும் மிகவும் மங்கலாக உள்ளது. ஊரடங்கு எப்போது முடிவடையும் என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி எங்களுக்கு தெரியாத போது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நாங்கள் எப்படி செய்யமுடியும். அரசாங்கத்திடமிருந்து தெளிவான முடிவை பெற்ற பின் நாங்கள் உட்கார்ந்து நிலைமை பற்றி யோசிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய எதையும் முன்கூட்டி சொல்ல முடியாது. எனவே ஐசிசி t20 உலகக்கோப்பைக்கு எங்களது கருத்து எதுவும் இல்லை ஆனால் அதுகுறித்து ஆராய உள்ளதாகவும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement