இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்திய அணி முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் அடைந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை பலரும் விமர்சித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அனுஷ்கா சர்மா இந்திய அணியுடன் இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி நெட்டிசன்கள் அதை சர்ச்சை ஆக்கி இப்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
#TeamIndia members at the High Commission of India in London. pic.twitter.com/tUhaGkSQfe
— BCCI (@BCCI) August 7, 2018
மேலும் அனுஷ்கா சர்மா என்ன இந்திய அணி வீரரா.? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இந்திய அணியின் துணை கேப்டன் எங்கோ ஒரு மூலையில் நிற்கிறார் அனுஷ்கா ஷர்மாவோ நடுவில் நின்று போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார் என்றும் மேலும் இந்திய அணி வீரர்கள் அவர்களது மனைவி அல்லது தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து பயிற்சிகைளில் தீவிரம் காட்ட சொல்லியுள்ளது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இந்திய அணியினருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்திய அணி சென்று பிறகு ஹோட்டல் திரும்பும்போது அனைவரும் தூதரகம் முன்பாக ஒரு போட்டோ எடுத்தனர். அதனை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது அதனை பார்த்த நெட்டிசன்கள் இந்திய அணியுடன் ஏன் அனுஷ்கா உள்ளார் .? அவர் என இந்திய அணி வீரரை.? என்று பல கேள்விகளை பதிவை போட்டனர். மேலும் இதை எப்படி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனுமதித்தது என்று பி.சி.சி.ஐ மீதும் கேள்விகளை எழுப்பினர்.
How come Anushka is posing thr as a indian cricket team member… har jagah she’s getting involved professionally, not right!!
— Siddhi Ajagaonkar (@Ime_n_mySalman) August 8, 2018
இது குறித்து அனுஷ்கா தெரிவித்த கருத்து என்னவென்றால் இந்த போட்டோ ஆகஸ்ட் 8ஆம் தேதி அதாவது 2வது டெஸ்ட் போட்டி தொடங்கும்முன் எடுக்கப்பட்டது. இப்போது இந்திய அணி தோற்று விட்டதால் இந்த புகைப்படத்தை பற்றி பேசுகிறீர்கள் எனவும், நடந்தது நடந்துவிட்டது இந்த பிரச்சனையை பெரிது படுத்தாதீர்கள் என்று கெட்கொண்டுள்ளார்.