ஜமைக்காவில் விருந்துக்கு சென்றும் இந்திய அணி வீரர்களுடன் குரூப் புகைப்படம் எடுப்பதை தவிர்த்த அனுஷ்கா சர்மா – காரணம் இதுதான்

Ind
- Advertisement -

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்து ஜமைக்கா சென்ற இந்திய அணி ஜமைக்காவில் உள்ள இந்திய உயர் கமிஷனர் செல்வநாயக் அவர்களின் இருப்பிடத்திற்கு விருந்துக்காக சென்றனர்.

- Advertisement -

இந்த விருந்தில் இந்திய அணி வீரர்களுடன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்து கொண்டார். அவர் வீரர்களுடன் கலந்துரையாடிபடி இருந்தார். மேலும் விருந்திலும் முழுவதுமாக கலந்துகொண்டார். ஆனால் அவர் இந்திய அணி வீரர்களின் ஒட்டுமொத்த குரூப் புகைப்படத்தில் அவர் இடம்பெறவில்லை.

இதற்கு காரணம் யாதெனில் இதேபோன்று 2018 ஆம் ஆண்டு இந்திய அணி லண்டன் பயணத்தின் போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா இந்திய அணி வீரர்களுடன் இருந்தார். அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீரர்களுடன் அனுஷ்கா சர்மா மட்டும் என்ன ஸ்பெஷலா அவர் ஏன் குரூப் புகைப்படத்தில் உள்ளார் என்று சர்ச்சையை கிளப்பினார்கள். அதனால் இம்முறை அதுபோன்ற பிரச்சனை ஏற்படக்கூடாது என்று அவர் குரூப் புகைப்படத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் அனுஷ்கா சர்மா அந்த விருந்தில் கலந்துகொண்டதை தெரிவிக்காமல் இந்திய அணி வீரர்கள் மட்டும் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குய்ப்பிடத்தக்கது.

Advertisement