அனுஷ்காவோடு ரோஹித்துக்கு என்ன பிரச்சினை. முற்றும் கோலி ரோகித் விவகாரம்..

anushka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித்தின் மனைவியும் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

- Advertisement -

வழக்கமாக நல்ல நட்புடன் இருந்து ரோஹித் மனைவி ரித்திகா மற்றும் கோலி மனைவி அனுஷ்காவுக்கும் தற்போது நல்ல நட்பில் இல்லை என்று தெரிகிறது. இதனால் கோலி – ரோஹித் பிரச்சனை முற்றி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரோஹித் தன்னை அன்பாலோ (Unfollow) செய்த பிறகு அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் : பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன் தான் செயல்படும் என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த மெசேஜ் ரோஹித்துக்கு தான் என்று அவர் சொல்லாவிட்டாலும் அவருக்கான மெசேஜ் தான் என ரசிகர்கள் வலைதளங்களில் மோத தொடங்கிவிட்டனர்.

ritika 1

கேப்டன் மற்றும் துணை கேப்டனின் ரசிகர்கள் இது போன்றயூகங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்லதல்ல எனினும் இதிலிருந்து மௌனம் கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்குள் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது போல கமெண்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement