இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் 7 முறை ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு அரையிறுதி வரை முன்னேறி இருந்தாலும் இறுதிப்போட்டியில் ஒருமுறைகூட ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஒரு குறை எப்பொழுதும் கோலி மீது இருந்து வருகிறது.
மற்றபடி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் மற்றும் வெளிநாட்டு தொடர்களை கைப்பற்றுதல் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர் என அனைத்திலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் கேப்டனாக இருந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வழங்கி வரும் கோலிக்கு ஐ.சி.சி தொடரை மட்டுமே கைப்பற்றவில்லை என்ற ஒரு குறை மட்டுமே உள்ளது. அதையும் விரைவில் கோலி பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இத்தாலியில் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்ட கோலி இதுவரை மூன்று ஆண்டுகளாக காதல் ஜோடி ஆகவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உலாவருகிறார்கள். போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றாலும் சரி வெளிநாடுகளில் நடைபெற்றாலும் சரி உடன் மனைவி அனுஷ்காவை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும் ஓய்வு நேரத்தில் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த வகையில் அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபராகவே இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் கோலியுடன் எடுக்கும் புகைப்படம் மட்டுமின்றி அவருடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
In the end , it’s only a game of light and shadow 💫 @vogueindia @anaitashroffadajania
அந்த வகையில் தற்போது ஊரடங்கு நேரத்தில் அனுஷ்கா சர்மா ஒரு விளம்பர நிறுவனத்திற்கு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் கோலியும் லைக் செய்து தனது கருத்துக்களையும் கமெண்ட்டுகள் ஆக பதிவிட்டு வருகிறார். அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.