6 வருஷம் முன்னாடி கோலி என்னிடம் சொன்னதை தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார் – ஆலன் டொனால்டு

Donald-2
- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆலன் டொனால்ட் தற்போது சமூக வலைதளம் மூலமாக கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் 2015ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தன்னிடம் பகிர்ந்துகொண்ட சில விடயங்களை யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டனான தோனி விலகியதன் பின்னர் 2015ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

Dhoni

- Advertisement -

விராட் கோலி பதவி ஏற்றுக்கொண்ட போது 7வது இடத்தில் இருந்த இந்திய அணியை அடுத்த இரண்டு ஆண்டில் முதலிடத்திற்கு கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி அசைக்க முடியாக மாற்றியுள்ள விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு தன்னிடம் இந்திய அணி பற்றி கோலி கூறிய சில விடயங்களை தற்போது ஆலன் டொனால்ட் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2015ஆம் ஆண்டு கோலி என்னிடம் வந்து பேசினார். அப்போது இந்திய அணியை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறினார்.

Bumrah

அதனை அவர் தற்போது செய்து காட்டி இருக்கிறார். மேலும் அவர் எதை நோக்கி செல்கிறார் ? எதற்காக விளையாடுகிறார் ? என்பதை நன்கு தெரிந்து இருக்கிறார் என்று கூறினார். அது மட்டுமின்றி இந்திய அணியில் முழு உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்களை உருவாக்க வேண்டும் என்று கோலி நினைத்தார். அதன்படி தற்போது உலகிலேயே சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. அதைத்தான் கோலியும் எதிர்பார்த்தார்.

siraj 1

அதுமட்டுமின்றி எந்த ஒரு அணியையும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் சந்தித்தாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய திறன் இந்திய அணிக்கு இருக்க வேண்டும் என நினைத்தார். மேலும் உலகின் அனைத்து மைதானங்களிலும் பவுலிங்கில் மிகச் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என அவர் இந்திய அணியை நினைத்தார். கடந்த பல ஆண்டுகளாகவே அவரது சிறப்பான முயற்சியின் மூலம் தற்போது இந்திய அணி பலமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement