இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நிலைமை இதுதான். ஓப்பனாக போட்டுடைத்த – அலைஸ்டர் குக்

Cook
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தற்போது அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது உலக ரசிகர்களின் பார்வை இந்த டெஸ்ட் தொடரின் மீது திரும்பியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் நிச்சயம் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் கூறுகையில் :

இந்திய அணி சிறப்பான வீரர்களை கொண்டு உள்ளது. ஆனால் பந்துவீச்சில் சற்று தொய்வாக காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சற்று நகரும் படி பந்து வீசினாலும் அதனை இங்கிலாந்து வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகஸ்ட் மாதத்தில் மைதானங்கள் ஈரப்பதத்துடன் இருந்தால் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார்கள்.

anderson

இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும். எனவே இந்த தொடரிலும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி திணறுவது உறுதி என்றும் இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியிடம் கஷ்டப்படும் என்றும் அலைஸ்டர் குக் வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அலைஸ்டர் குக் கூறியது போலவே ஏற்கனவே நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வீசிய ஸ்விங் பந்திற்கு இந்திய அணி சரணடைந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement