உங்க தலையில் இருக்க முடியவிட என்கிட்ட பணம் அதிகம் இருக்கு. சேவாக்கை தாக்கி பேசிய – பாக் வீரர்

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் தனது கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களையும், அவ்வப்போது நடக்கும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த செய்திகளையும் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Akhtar

- Advertisement -

குறிப்பாக இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள் மற்றும் இந்திய அணி குறித்து புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் அக்தரின் இந்த யூடியூப் சேனலுக்கு வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் சிலர் பணம் ஈட்டுவதற்காக இந்திய அணியை வேண்டுமென்றே அவ்வாறு புகழ்ந்து பேசுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அக்தர் அந்த பழைய கருதிற்காக ஷேவாக்கை தாக்கி பேசியிருக்கிறார். அதில் சேவாக்கை இந்திய நட்சத்திரம் என்று மறைமுகமாகக் குறிப்பிட்ட அக்தர் : இந்திய நட்சத்திரத்தின் தலையில் உள்ள முடிகளை விட அதிகமாக என்னிடம் பணம் உள்ளது. எனவே நான் கிரிக்கெட் தொடர்பான எனது கருத்துக்களை பணத்திற்காக கூறவில்லை. நான் அப்படி பேசுவதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் எனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணிக்காக நான் பதினைந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி உள்ளேன்.

Sehwag

நான் யூடியூப் மூலம் பிரபலம் அடையவில்லை எனக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் தான் அதனால் நான் இந்தியாவை புகழவில்லை. இந்தியா சரியாக விளையாடாத போது அதையும் விமர்சனம் செய்துள்ளேன் என்று அக்தர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சேவாக் இந்த கருத்தினை கூறி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்போது அக்தர் யூடியூப் சேனல் தொடங்கவே இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement