இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இந்தியா ‘ஏ’ அணி..! இதில் ரகானே மற்றும் சென்னை வீரர் விளையாடுகிறார்கள்..!

rahaney
- Advertisement -

இந்திய ஏ அணி வரும் ஜூலை 16 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக கருதப்படும் முரளி விஜய் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் அணியில் சேர்க்கப்ட்டுள்ளனர்.
rahane2
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்த முரளி விஜய் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கபடாமல் இருந்த்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் வாய்ப்பளிக்கபட்டிருந்தது.

இவர்கள் இருவருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் இவர்கள் இருவருக்கும் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தி தந்து வருகிறது. அதே போல முரளி விஜய் கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் 402 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
muralivijay
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இந்திய அணி , ஒரு நாள் தொடருக்கு பின்னர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரில் முரளி விஜய் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகிய இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -
Advertisement