இரட்டைசதம் அடித்ததும் கோலியை பார்த்து அகர்வால் கூறியது இதுதான் – விவரம் இதோ

IND-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Rahane

- Advertisement -

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அணியில் ரஹானே 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அகர்வால் சிறப்பாக விளையாடி தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டை சதத்தை நிறைவு செய்து 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை எடுத்துள்ளது.

ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததும் அகர்வால் கோலியை நோக்கி இரண்டு விரலை காட்டி இரட்டை சதத்தை நிறைவு செய்ததாக சைகை செய்தார். இதற்கு காரணம் யாதெனில் அகர்வால் தனது சதத்தை அடிக்கும்போது கோலி தொடர்ந்து பேட்டிங் செய்யுமாறும் இரட்டை சதத்தை பூர்த்தி செய்யுமாறும் அகர்வாலிடம் சைகை செய்தார்.

Agarwal-3

அதனை தொடர்ந்து சிறப்பாக விளையாடி அகர்வால் தான் இரட்டை சதத்தை நிறைவு செய்தவுடன் கோலியை நோக்கி தனது இரண்டு விரல்களின் மூலம் இரட்டை சதத்தை அடித்ததாக சைகை காண்பித்தார். மீண்டும் கோலி இரட்டை சதம் எனக்கு பத்தாது முச்சதத்தை பதிவு செய்யுமாறு மூன்று விரல்களை காண்பித்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement