அகர்வால் மீண்டும் சதம். அதுவும் எப்படி அடிச்சார்னு பாருங்க – அசந்துடுவீங்க

Agarwal-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது.

Agarwal-2

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்துள்ளது. துவக்க வீரர் மாயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 2 ஆவது சதத்தை அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் அகர்வால் இந்த சதத்தை 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் கடந்தார். மொத்தம் 195 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களுக்கு ரபாடாவின் பந்துவீச்சில் டுபிளிஸ்சிஸ்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சதத்தின் தனிச்சிறப்பு யாதெனில் 90 ரன்களை கடந்த பின் வீரர்கள் தங்களது சதத்திற்காக பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து சதத்தை நிறைவு செய்வார்கள்.

Agarwal

ஆனால் ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்து அகர்வால் சீக்கிரம் சதத்தை நெருங்க வேண்டும் என்று 87 ரன்கள் இருந்தபோது மகாராஜ் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு 99 ரன்களுக்கு வந்தார். அதன் பின்னர் பவுண்டரி அடித்து அதிரடியான பாணியில் தனது சதத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் போட்டியில் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement