இலங்கை தொடரில் தவான் மட்டும் இந்த விஷயத்துல சொதப்பிட்டா அவர் சேப்டர் க்ளோஸ் – வார்னிங் கொடுத்த அகார்கர்

agarkar
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

dravid

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் துவக்க வீரராக களமிறங்கும் ஷிகார் தவான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று அகார்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்திய அணி ஐசிசி கோப்பைகளில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து வருவதால் இந்த டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அகார்கர் தவான் குறித்து ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Dhawan 1

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரை விளையாடுவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை இந்த தொடரில் துவக்க வீரராக தவான் களமிறங்க வேண்டும் எனில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ரன் குவித்து தன்னை நிரூபித்தாக வேண்டும்.

dhawan

அப்படி இலங்கையில் அவர் ரன் குவிக்க தவறி விட்டார் என்றால் டி20 உலக கோப்பையில் ராகுல்தான் விளையாடுவார் எனவே இந்த இலங்கை தொடரை கடைசி வாய்ப்பாக கொண்டு தன்னை நிரூபித்தாக வேண்டும் .இது ஒரு சவாலான விடயம் தான் இருப்பினும் அவர் இந்த தொடரில் நன்கு விளையாடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெற முடியும் என அகார்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement