கேப்டன் ரஹானே மற்றும் சிராஜ் வைத்த கோரிக்கை. அதிரடியான நடவடிக்கையை எடுத்த நிர்வாகம் – விவரம் இதோ

rahane
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் விளையாட்டையும் தாண்டி தற்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிட்னி மைதானத்தில் செய்யும் நிறவெறி தொடர்பான சர்ச்சையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மூன்றாம் நாளில் ஆரம்பித்த இந்த நிறவெறி குறித்த கேலிப்பேச்சு தற்போது நான்காம் நாளிலும் தொடர்ந்து வருகிறது. இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த மைதானம் சிட்னி மைதானத்தில் இதுபோன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேவலமாக நடந்து கொள்வது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பல்வேறு வீரர்களும் அதாவது குறிப்பாக தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து விளையாடும் வீரர்களை அவர்களின் நிறத்தை வைத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் கேலி இன்று மைதானத்தில் அதிகரிக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் நேராக அம்பயரிடம் சென்று தன்னை தொடர்ந்து கேலி செய்யும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து புகார் செய்தது மட்டுமின்றி யார் யார் தன்னை நோக்கி கேலி செய்தார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் ரஹானேவும் இதுகுறித்து அம்பயரிடம் புகார் அளிக்க போட்டி 10 நிமிடம் தடைபட்டது.

Siraj 2

உடனே மைதானத்தில் இருந்த அம்பயர்கள் மைதான நிர்வாகிகளை அழைத்து ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ரசிகர்களை வெளியேற்றும் படி கேட்டுக் கொண்டனர். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுத்த மைதான நிர்வாக அதிகாரிகள் ரசிகர்களிடம் சென்று நிறவெறி குதித்து தாக்கிப் பேசிய ரசிகர்கள் சிலரை மைதானத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அங்கிருந்த ரசிகர்களையும் எச்சரித்தனர்.

Aus fans

மேலும் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் இனி இனவெறி குறித்து சர்ச்சையான குரல்களை நீங்கள் மைதானத்தில் எழுப்பினால் அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி கட்டாயமாக மைதானத்தில் வெளியேற்றப்படுவீர்கள் என்றும் எச்சரித்து நடவடிக்கை எடுத்தனர். சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகிகள் எடுத்த இந்த அதிரடி முடிவு சற்று ஆறுதலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement