- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2011இல் தொப்பை மேகிமேன்னு கிண்டலடிச்சாங்க.. ஹிட்மேனாக மாறிய ரோஹித்தின் பின்னணியை பகிர்ந்த அபிஷேக் நாயர்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். மும்பையை சேர்ந்த அவர் 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2012 வரை மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஷிகர் தவானுடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்து எதிரணிகளை சொல்லி அடிக்கும் ரோகித் சர்மா இந்தியாவின் மேட்ச் வின்னராக நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் போன்ற நிறைய உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். இதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் அவர் முன்னேறியுள்ளார்.

- Advertisement -

மேகிமேன் ரூ ஹிட்மேன்:
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் கொஞ்சம் தொப்பையுடன் ஃபிட்னஸ் இல்லாததால் மேகிமேன் என்று ரோஹித் சர்மா கிண்டலடிக்கப்பட்டதாக அவருடைய நண்பர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அங்கிருந்து கடினமாக உழைத்த ரோகித் சர்மா இன்று ஹிட்மேனாக முன்னேறியுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாத போது கடினமாக உழையுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஏனெனில் அந்த சமயத்தில் அவர் கொஞ்சம் அதிக எடையைக் கொண்டிருந்தார். ஒருமுறை யுவராஜ் மற்றும் ரோஹித் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் வயிற்றைச் சுற்றி ஒரு வட்டம் இருந்தது. அதை நோக்கி ஒரு அம்புக்குறி இருந்ததை நான் மறக்க மாட்டேன்”

- Advertisement -

“பின்னர் அதை நாங்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தோம். அப்போது அதைப் பார்த்த ரோஹித் இதை நான் மாற்ற வேண்டும் என்று சொன்னார். சில நாட்களுக்கு பின் உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அங்கு தான் ரோகித் சர்மா ஹிட்மேனாக உருவானார். ஏனெனில் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அவர் தன்னுடைய அணுகு முறையையும் கேரியரையும் மாற்ற விரும்பினார்”

இதையும் படிங்க: கேப்டன்ஷிய விடுங்க.. பாபர் அசாம் அதுக்கே தகுதியற்றவர்.. பாகிஸ்தான் முன்னேற இதை செய்யணும்.. சேவாக் ஆலோசனை

“என்னுடைய பயணத்தில் அவர் தான் வெற்றிகரமாக மாறிய முதல் கிரிக்கெட்டர். அவரைப் பற்றி பலரும் 2 நிமிட மேகிமேன் என்பது போன்ற பலவற்றை சொல்வார்கள். இருப்பினும் அதுவே அனைத்தையும் மாற்றியது. அப்போது “யார் என்ன சொன்னாலும் இந்த ஐபிஎல் முடிந்ததும் அனைவரும் இவர் அதே பழைய நபர் கிடையாது என்று சொல்வார்கள்” என ரோஹித் என்னிடம் சொன்னார்” எனக் கூறினார்.

- Advertisement -