யுவராஜின் அதிவேக அரைசதத்தை 2 பந்துகளில் தவறவிட்ட இளம்வீரர் – விவரம் இதோ

Abhay
- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் டி பிரிவு ஆட்டத்தில் மிசோரம் அணியும், மேகாலயா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

Abhay Negi

- Advertisement -

Fifty

இந்த போட்டியில் மேகாலயா ஆல்ரவுண்டர் அபாய் நெகி என்கிற வீரர் 14 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து பிரமிக்க வைத்தார். மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 15 பந்துகளில் அரை சதம் அடித்ததுதான் இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. மேலும் யுவராஜ்ஜின் அதிவேக அரைசதத்தை அவர் இரண்டு பந்துகளில் தவற விட்டது குறிப்பிடத்தக்கது. 27 வயதான அபாய் நேகி 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement