இந்திய அணி வேண்டுமென்றே தான் அப்படி செய்தார்கள். மீண்டும் சர்ச்சை கருத்தினை வெளியிட்ட – அப்துல் ரசாக்

Razzaq
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால் லீக் சுற்றுகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து மட்டுமே லீக் சுற்றுகளில் இந்திய அணி பெற்ற ஒரே தோல்வியாக அமைந்தது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் அந்த தோல்வி குறித்து ஏற்கனவே சில சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன. அதாவது இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை குறித்த எழுதிய தனது புத்தகத்தில் தோனி அந்த போட்டியில் இலக்கை விரட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும் ரன் ரேட்டை உயர்த்த மட்டுமே நினைத்து ஆடினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கோலி மற்றும் ரோஹித் ஆட்டமும் சிறப்பாக இல்லை அது மர்மமான விடயமாக அமைந்ததாகும் எழுதியிருந்தார். அதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதனாலேயே அதேபோன்று விளையாடினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Dhoni 1

இந்நிலையில் தற்போது அந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் இந்திய அணி குறித்து தவறான கருத்தினைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் அந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்தோம் எங்கள் அனைவருக்கும் அதே உணர்வுதான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நல்ல நிலைப்பாட்டில் பந்துகளை வீசவில்லை. ரன்களை வேண்டுமென்றே அதிகம் விட்டுக் கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.

Razzaq

மேலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே இங்கிலாந்து அணியுடன் இந்தியா வேண்டும் என்று தோற்றது. எனவே இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் பாகிஸ்தான் அரையிறுதியில் விளையாடக் கூடாது என்ற காரணத்தினாலேயே இந்தியா இதேபோன்று செய்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement