எனது தூக்கத்தை கெடுத்தவர் இந்த இந்திய பந்துவீச்சாளர்தான்: ஆரோன் பின்ச் கடும் வேதனை

finch1
- Advertisement -

இந்திய அணி சென்ற வருடம் ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த தொடரில் வெற்றி பெற இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர். அதுமட்டுமின்றி ஒட்டு மொத்தமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அசத்தலாக இருந்தது.

மேலும், குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஆரோன் பின்ச்சை தொடர் முழுவதும் ஆட விடாமல் அவுட் செய்து அற்புதம் நிகழ்த்தினார். பின்ச் பேட்டிங் செய்ய வரும்போதெல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார். அந்த தொடர் முழுவதும் பின்ச் ஏமாற்றம் அளித்தார்.

bumrah 1

இந்நிலையில் அந்த தொடரை நினைவு கூர்ந்த ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் : கூறியதாவது இந்தியாவுக்கு எதிரான அந்த தொடரை நினைக்கும்போது தனக்கு தூக்கமே கெட்டு விட்டதாக தற்போது பின்ச் கூறியுள்ளார். மேலும் அந்த நிகழுவது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

அந்த நாட்களில் திடீரென தூக்கத்திலிருந்து விழித்து விடுவேன். அடுத்த போட்டியில் பும்ரா தன்னை வீழ்த்தி விடுவாரோ என்ற பயம் எப்போதும் இருக்கும். புவ்னேஷ்வர் குமாரும் இதேபோன்று பயத்தை தனக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.

Bumrah

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் ரசிகர்கள் இல்லா கிரிக்கெட் போட்டியை விளையாடி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement