ஒன்டே கிரிக்கெட்ல வேர்ல்டு நம்பர் 1 பேட்ஸ்மேன்னா அது இவர்தான் – இந்திய வீரரை புகழ்ந்த பின்ச்

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். பெரிதாக அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட அதிரடியான ஆட்டம் இல்லை. இருந்தாலும் விராட் கோலியின் தலைமையில் விளையாடியது அவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தாலும் விராட் கோலியின் தலைமையில் விளையாடியதை பெருமையாக பேசி இருக்கிறார் ஆரோன் பின்ச்.

finch

- Advertisement -

மேலும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பின்ச். விராட் கோலியின் தலைமையில் விளையாடியதால் அவரைப் பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது. மேலும் அவருக்கு தெரிந்த கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். அதனை தாண்டி அவர்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது சக அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருக்கையில் அவரை விட்டுவிட்டு இந்திய கேப்டனை புகழ் பாடியிருக்கிறார் ஆரோன் பின்ச் அந்த அளவிற்கு விராட் கோலியின் ஆட்டம் அவரை கவர்ந்திருக்கிறது இதுகுறித்து அவர் கூறுகையில் …

என்னை பொறுத்தவரையில் விராட் கோலி தான் தலைசிறந்த ஒருநாள் வீரர். எண்ணற்ற சாதனைகள் தன் பெயரில் சாதித்து வைத்திருக்கிறார். இனிவரும் காலங்களில் அவரது சாதனையை முறியடிக்க பல வருடங்களாகும். ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு எளிதாக அவரை விக்கெட்டை வீழ்த்தி விட முடியாது. எங்களது அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார் அவர். தனியாக உட்கார்ந்து திட்டங்களை வகுக்கும் அளவிற்கு மிகச்சிறந்த வீரராக இருக்கிறார் கோலி. அவரது விக்கெட்டை வீழ்த்த தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

kohli 2

டெஸ்ட் அணியில் அவர் இல்லாதது வருத்தம் அளித்தாலும் அது எங்களுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஆரோன் பின்ச். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement