ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவர்களே ஒப்பனராக களமிறங்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்க உள்ளது. இந்த போட்டியை வெற்றிகரமாக துவங்க இரு அணிகளுமே மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கருத்துக்களையும், பல்வேறு முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் துவக்க ஜோடி யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வல்லுனருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொறுத்தவரை இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரே களமிறக்க வேண்டும். ஏனெனில் எப்பொழுதும் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் டெஸ்ட் அணியின் துவக்க வீரர்கள் பட்டியலில் இருந்து கொண்டே இருக்கின்றனர். அதுமட்டுமின்றி முன்னர் அவர்கள் விளையாடிய விதமும் அவர்களுக்கு வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டவர்.

எனவே அவரை துவக்க வீரருக்கு பதிலாக கோலியின் இடத்தில் இறக்கலாம். பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா 29 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் அடித்தார். என்னை பொருத்தவரை அவரே அகர்வாலுடன் களமிறங்க வேண்டும். அதுவே இந்திய அணிக்கு பலமாக அமையும் கோலி சென்றபின்னர் 3-வது இடத்தில் கில் களம் இறங்கினால் அது சிறப்பாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

gill 1

பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் முதல் இன்னிங்சில் 43 பந்துகளில் 58 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் துவக்க வீரர் யார் என்பது குறித்த கேள்வி இன்னும் நமக்குள்ளும் இருந்து கொண்டுதான் உள்ளது. ஏனெனில் அந்த இடத்தில் அகர்வால்,ப்ரித்வி ஷா, கில் ஆகியோர் இருக்கின்றனர் இதில் அகர்வாலுடன் இவர்கள் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement