ஐ.பி.எல் தொடர் நடக்கலைனா ? தோனியின் நிலைமை இதுதான் – ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்தியாவிலும் இந்த ஆண்டு துவங்க இருந்த ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dhoni

- Advertisement -

இருப்பினும் கொரோனா தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில் உலக கோப்பை அரையிறுதி பின்னர் தோனி எந்தவித போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாட வில்லை. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட இருந்தார். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக அமையுமாயின் டி20 உலக கோப்பை தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படுவார் என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Ravi

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடப்பது கேள்விக்குறியாக உள்ளதால் தோனியின் நிலைமை என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : தோனியை போன்ற ஒரு வீரருக்கு ஐபிஎல் ஒருபோதும் அளவுகோலாக இருக்காது. மேலும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்வார் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் அவரை இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று யாரும் சொல்லமுடியாது. தோனி என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் அணிக்கு திரும்பும் வேண்டுமா வேண்டாமா என்பது அவருடைய தனிப்பட்ட விடயம். அது அவருக்கு நிச்சயம் தெரியும் ஐபிஎல் தொடர் தோனியின் தேர்வில் ஒரு முக்கிய காரணியாக அமையாது. ஏனெனில் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தால் தேர்வு குழுவினரை அவர் அணுகினால் போதும் அவர்களை அவரை தேர்வு செய்து விடுவார்கள்.

Dhoni

மேலும் அவருடைய அனுபவம் சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கிடையாது. தோனி ஒரு மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரர். அவர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அவர் டி20 உலக கோப்பை அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. இருப்பினும் புதிய தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தோனியிடம் தேர்வு அமையும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement