ENG vs SL : இவரை கட்டுப்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்று நினைத்தோம் – ஆட்டநாயகன் மலிங்கா பேட்டி

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Malinga-2
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

eng-v-sl

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

malinga

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் மலிங்கா கூறியதாவது : இங்கிலாந்து பலம் வாய்ந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். அதுவும் கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். பல 20-20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அவர் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்பிக்கையுடன் நாங்கள் பந்துவீசினோம். சரியான இடத்தில் பந்துவீசி அவருக்கு அதிகமாக ரன் எடுக்க விடாமல் அழுத்தத்தை கொடுத்தோம் இறுதியில் அந்த அழுத்தம் எங்களுக்கு சாதகமாகிவிட்டது என்று மலிங்கா கூறினார்.

Advertisement