ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் நாளை இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி அணியை குவாலிபயர் 2 போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி தற்போது இறுதிப் போட்டிகள் நுழைந்துள்ளது. டெல்லி அணிக்கு எதிரான வெற்றியை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கொண்டாடி வர சென்னை அணியின் வீரரான ஹர்பஜன்சிங் வித்தியாசமான முறையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ட்விட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let’s do it, #CSK pic.twitter.com/UxLfDY8w4o
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 10, 2019
இந்த ட்வீட்டில் இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண வின்னயம் செய்துவிடல். சறுக்கினாலும் யானை யானை தான் சிங்கம் சிங்கம்தான். மொத்தத்தில் நாங்க நாங்க தான். எங்க சங்கம் இருந்துச்சுனா கண்டிப்பா சம்பவம் இருக்கும் மீண்டும் ஒரு சரித்திரத்தை நோக்கி போது நடை சிஎஸ்கே என்று ஹர்பஜன் சிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.