இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனோடு சேர்த்து 6 வீரர்கள் இடம்பெற வாய்ப்பு – விவரம் இதோ

Sai Sudharsan
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது ஒரு மாதத்தை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

சாய் சுதர்சனோடு சேர்த்து 6 வீரர்களுக்கு வாய்ப்பு :

இந்த தொடருக்கான இந்திய அணி மே மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 17 பேர் கொண்ட அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய எதிரான தொடரை இந்திய அணி இழந்து நாடு திரும்பிய வேளையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக நடைபெறவுள்ள அந்த தொடரில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், கே.எல் ராகுல், ரோகித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நிச்சயமாக தேர்வார்கள் என்கிற வேளையில் அவர்களுக்கு அடுத்து தற்போது ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் 6 வீரர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அசத்தி வரும் தமிழக வீரரான சாய் சுதர்சன், பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதார், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : லண்டனின் விஸ்டன் கெளரவத்தை மொத்தமாக அள்ளிய இந்தியாவின்.. பும்ரா, மந்தனா – வெளியான அறிவிப்பு

கருண் நாயர் ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வேளையில் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மீண்டும் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருவதால் அவரையும் இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement