- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல்- லில் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாத அளவுக்கு அதிர்ஷ்டமில்லாத டாப் 5 வீரர்கள்..!

தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் பல்வேறு அணிகளில் பல்வேறு வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டு அந்தந்த அணிக்காக விளையாடி வருகின்றனர்.ஆனால் ஒரு சில வீரர்கள் ஏலம் எடுக்கப்படும் நடந்து முடிந்த போட்டிகளில் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடாமல் இருப்பது சற்று வருந்ததாக விஷயம் தான் அந்த வருசையில் உள்ள டாப் 5 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

 

- Advertisement -

சௌரப் திவாரி (மும்பை இந்தியன்ஸ் ):

2015 இல் இந்திய ஏ அணையில் ஆடிய இவர். டி 20 போட்டியில் அதிகப்படியாக 94 ரன்களை குவித்திருக்கிறார். ஒரு காலத்தில் ஹைதராபாத் அணியின் பிரதான விக்கெட் கீப்பராக இருந்த இவர் தற்போது டெல்லி அணியில் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவ்வளவு ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டாலும் இன்னும் இவரை டெல்லி அணி ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை.

- Advertisement -

பார்த்திவ் படேல் (பெங்களூர் ராயல் சாலேஞர்ஸ்):

நடந்து முடிந்த 10 ஐபில் சீசனிலும் சென்னை,டெக்கான் சார்ஜஸ்,மும்பை போன்ற அணிகளில் விளையாடிய இவர் இந்த ஆண்டு பெங்களூர் அணியால் 1.7 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கும் இவர் இதுவரை பெங்களூர் அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட பங்கு பெறவில்லலை.

- Advertisement -

கலீல் அஹமத் (சன் ரைசஸ் ஹைட்ரபாத்):

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 3 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் ஆணை ஏலம் எடுத்துள்ளது. மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு நடத்த ஐபில் தொடரை டெல்லி அணிக்காக ஆடியுள்ளார். மேலும் u19 போட்டிகளிலும் 3 தொடரில் 12 விக்கெட்டுகளை வீசி அசத்தியுள்ளார். இருப்பினும் இவருக்கு இந்த ஐபில் தொடரில் ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை.

- Advertisement -

நமன் ஹோஜா (டெல்லி டேர்டெவில்ஸ் ):

அதிரடி ஆட்டக்காரராண இவர் 2008 இல் உலக கோப்பையை வென்ற u19 இந்திய அணியில் இடம்பெற்றவர். 2010 இல் இதே மும்பை அணிக்காக விளையாடிய இவர் 16 போட்டிகளில் 419 ரன்களை குவித்தார்.இந்த ஆண்டும் 80 லட்சம் கொடுத்து மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இவர் இந்த ஆண்டு ஒரு போட்டிகளில் கூட விளையாடவில்லை.

நவ்தீப் சைனி (பெங்களூர் ராயல் சாலேஞர்ஸ்):

140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச கூடிய இவர் கடந்த ஆண்டு டெல்லி அணியில் ஆடிவந்தார். பின்னர் இவரின் திறைமையை கண்டுகொண்ட பெங்களூரு அணி இந்த ஆண்டு இவரை 3 கோடி ரூபாய் பெரும் தொகையை கொடுத்து ஏலம் எடுத்தது. இருந்து என்ன பிரயோஜனம் இவரையும் ஒரு போட்டியில் கூட பயன்படுத்தாமல் வைத்துள்ளது பெங்களூரு அணி.

- Advertisement -