மூன்றாவது ஒருநாள் போட்டி : இந்திய அணியில் 5 புதுமுக வீரர்கள் – 31 வருடத்தில் இதுவே முதல் முறை

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை கைப்பற்றிய இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளதன் காரணமாக இன்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது.

ind

- Advertisement -

அதன்படி தற்போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து விளையாடி வரும் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருந்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு 5 புதுமுக வீரர்கள் இந்த போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனும்.

மிடில் ஆர்டரில் க்ருனால் பாண்டியாவிற்கு பதிலாக நிதிஷ் ராணாவும் இடப்பெற்றுள்ளனர். அதேபோன்று பவுலர்கள் புவி மற்றும் தீபக் ஆகியோருக்கு பதிலாக சேத்தன் சக்கரியா,ராகுல் சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளர்னர். சஹாலுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

gowtham

இதன் காரணமாக இன்றைய இந்திய அணியில் மொத்தம் 5 புதுமுக வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் பந்து வீசிய குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாகர், புவனேஸ்வர் குமார் என நான்கு பேரும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நான்கு வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement