இங்கிலாந்து எதிராக இந்திய அணியில் 3 இளம் வீரர்கள் சேர்ப்பு..! CSK வீரர் யார் தெரியுமா..?

deepak
- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தனது வெற்றியை பதித்தது. அந்த தொடரை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ள நிலையில் ஒரு நாள் தொடரை கைபற்ற போவது யார் என்பதை உறுதி செய்யும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று (ஜூலை 17) நடைபெற உள்ளது.
Prithvi_Shaw
ஒரு நாள் போட்டிக்கு பின் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டிக்கும் டெஸ்ட் போட்டிக்கும் நிறைய வித்யாசம் இருப்பதால் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சில வீரர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அந்த வகையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் கீழே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று வீரர்களை சேர்த்தால் அது கண்டிப்பாக இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

ப்ரித்திவ் ஷா

- Advertisement -

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி தனது திறமையை நிரூபித்தார். நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத இவர் இந்த தொடரில் சேர்க்கப்பட்டால் அது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். திலீப் தொடரில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தீபக் சஹர்

இந்திய அணியில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ள பும்ராவிற்கு பதிலாக இவர் அணியில் சேர்க்கப்பட கொண்ட யோசிக்கலாம். தனது பனிரெண்டு வயதிலிருந்து கிரிக்கெட் ஆடி வருகிறார் தீபக் சஹர்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வந்தார். ஒரு வேலை பும்ரா காயம் குணமடையவில்லை என்றால் இவரது வருகை இந்திய அணிக்கு கொஞ்சம் பலம் சேர்க்கும்.

கருண் நாயர்

இந்திய அணியில் ஒரு சில போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இவர் விளையாடியுள்ளார். சேவாக்கிற்கு பிறகு டெஸ்ட் போட்டியில் 3 சதமடித்த ஒரு இந்திய வீரரும் இவர் தான். தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் இவர். இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

Advertisement