மனுஷன் அழுதுட்டாரு.. அக்தர் முதல் அப்ரிடி வரை.. வரலாறு படைத்த இந்திய அணியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரரகள்

Pakistan Players
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

சொல்லப்போனால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஒருமுறை மட்டுமே டி20 உலகக் கோப்பை வென்றுள்ளன. ஆனால் இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது. அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது.

- Advertisement -

வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள்:
இந்த வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வெற்றிக்காக இந்திய அணிக்கு சோயப் அக்தர் ட்விட்டரில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “ரோஹித் சர்மா இதை செய்துள்ளார். உணர்ச்சிகள் உச்சகட்டமாக இருக்கிறது”

“இந்தியா இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2023 உலகக்கோப்பை ஃபைனலில் அகமதாபாத் நகரில் அவர்கள் தோற்றனர். அந்தத் தொடரையும் இந்தியா வெல்வதற்கு தகுதியானவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். தற்போது அதை சாதித்துள்ள ரோஹித் சர்மா களத்தில் அழுவதே இந்த வெற்றி அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சாகித் அப்ரிடி பாராட்டியுள்ளது பின்வருமாறு. “நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். இதற்கு ரோகித் சர்மா முழுவதுமாக தகுதியானவர். அவர் அற்புதமான தலைவர். விராட் கோலி எப்போதுமே பெரிய போட்டிகளில் அசத்தக்கூடியவர். ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை”

“தென்னாப்பிரிக்காவுக்கு துரதிஷ்டம். இருப்பினும் தொடர் முழுவதும் அவர்கள் அற்புதமாக விளையாடினார்கள்” என்று கூறினார். இது பற்றி வக்கார் யூனிஸ் கூறியுள்ளது பின்வருமாறு. “மகத்தான வீரர்கள் அழுத்தமான சூழ்நிலையில் தான் எழுவார்கள். விராட் கோலி அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவின் 2 ஓவர்கள் தான் அனைத்தையும் மாற்றியது. அவர் தரமான உலகக் கோப்பை வின்னர். இந்தியா மற்றும் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்” கூறினார்.

இதையும் படிங்க: வலுக்கட்டயாமாக ஓய்வு பெற வைத்த பிசிசிஐ? ரோஹித், கோலி சொன்னதில் இதை கவனிச்சீங்களா

இது பற்றி ஷாஹீன் அப்ரிடி பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அற்புதமான சர்வதேச டி20 கேரியருக்கு சிறப்பான முடிவு விராட் கோலி. டி20 உலகக் கோப்பை இந்தியா வென்றதற்காக வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் (ரோஹித், விராட்) அற்புதமான டி20 கேரியருக்காக வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இது போக சக்லைன் முஸ்டக், அஹ்மத் சேஷாத் போன்ற மேலும் சில பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை வாழ்த்தியுள்ளனர்.

Advertisement