நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரரான ரஸ்ஸல் 17 பந்தில் 48 ரன்களை குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அவரது அதிரடி காரணமாக கொல்கத்தா அணி எளிதாக 210 ரன்களை கடந்தது.இதோ அந்த வீடியோ :
முதல் போட்டியில் கொல்கத்தா அணி ரஸ்ஸலின் அதிரடியாலே வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் அவரது அதிரடியால் இந்த போட்டியிலும் வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.