டி20 உலககோப்பையை நாங்க ஜெயிச்சே ஆகனும்.. நியாயமான கருத்தை முன்வைத்த – வெ.இ கேப்டன் ரோவ்மன் பவல்

Powell
- Advertisement -

ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் இன்று காலை துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அமெரிக்கா அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது. அதற்கு அடுத்து இரண்டாவது போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இன்று இரவு நடைபெற இருக்கிறது.

அதன்படி இன்று இரவு 8 மணி அளவில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ இனியா ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் கனவுடன் இன்று களமிறங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பையை வெல்வது குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நாங்கள் மூன்றாவது முறையாக வென்றால் நன்றாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றும்போது அதனை எங்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் நினைவு கூறுவோம். அதோடு மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து அனைவருமே அறிந்திருப்பீர்கள். இந்த உலகக் கோப்பையை நாங்கள் கைப்பற்றினால் நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். அதோடு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் அது நன்மையை கொடுக்கும்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே வீரரை வைத்து ஹார்டிக் பாண்டியாவை ஓரங்கட்ட பிளான் போடும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

மேலும் கோப்பையை வென்று தரவரிசையில் நாங்கள் முன்னேறினால் நிச்சயம் எங்களது அணிக்கு ஸ்பான்சர்களும் கிடைப்பார்கள். அதன்மூலம் வீரர்களாகிய எங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்ற நியாயமான கருத்தை அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என்று நம்பலாம்.

Advertisement