சில நேரங்களில் எனக்கே என்மீது வெறுப்பாக இருக்கும் – பண்ட் ஓபன் டாக்

Pant
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

Pant

- Advertisement -

டி20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடாத பண்ட் மூன்றாவது போட்டியில் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றி வழிவகுத்தார். மூன்றாவது போட்டி முடிந்து அளித்த பேட்டியில் பண்ட் கூறியதாவது :

ஒவ்வொரு போட்டியும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்து களமிறங்குவேன் ஆனால் சில போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது. அப்போதெல்லாம் எனக்கு என் மீது வெறுப்பு ஏற்படும். ஆனால் விளையாட்டில் இது சகஜம் என்பதால் அதனை நான் புரிந்து கொள்வேன்.

pant 1

மேலும் இப்போது தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட கடின பயிற்சியும் மேலும் சில நுணுக்கங்களையும் கற்று வருகிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் பண்ட் கூறினார்.

Advertisement