என்னடா உங்களுக்கு பிரச்சனை? நியூசிலாந்து பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய விராட் கோலி

Kohli-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Ind-lose

- Advertisement -

ஏற்கனவே தோல்வியின் விரக்தியில் இருக்கும் விராட் கோலியிடம் எக்குத்தப்பாக கேள்வி கேட்டு பத்திரிகையாளர் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது ஆட்டம் இருந்து அவர் வெளியே சென்றபோது விராட்கோலி வழக்கம்போல் ஆக்ரோஷமாக தனது சேட்டைகளை அவர்முன் செய்து காட்டினார்.

மேலும் ரசிகர்களை வாயை மூடும்படி ஒருசில சைகைகளை செய்தார். இது அந்த நேரத்தில் சர்ச்சையானது இதுகுறித்து நியூசிலாந்து நிருபர் ஒருவர் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி இடம் கேட்டார். என்ன மாதிரியான செய்கை இது? அதற்கு உங்களது பதில் என்ன? ஆடுகளத்தில் ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்கள்? நீங்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். என்பது போல் அந்த பத்திரிகையாளர் கேட்டார் .

Kohli

இதற்கு கடும் கோபமடைந்த விராட்கோலி. அந்த நிருபரை பார்த்து இதற்கு பதில் வேண்டுமெனில் நீங்களே ஒரு நல்ல பதிலை கொண்டுவாருங்கள். அரைகுறை கேள்விகள் அரைகுறை விவரங்களுடன் நீங்கள் இங்கு வந்தால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. ஆடுகளத்தில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாது . சர்ச்சையை கிளப்ப முயற்சி செய்ய வேண்டாம் . இது அதற்கான இடம் இது இல்ல இது குறித்து ஆளுநரிடம் நடுவரிடம் விளக்கம் கொடுத்து விட்டேன் நன்றி என்று பதிலளித்தார்.

Advertisement