கபடி இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகஅளவில் சிறப்பாக இருக்க காரணம் இதுதான் – கோலி சிறப்பு உரை

Kohli
- Advertisement -

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் யூ மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணிகள் வெற்றி பெற்றன. மும்பையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் யூ மும்பா மற்றும் புனேரி பல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.

Kohli 1

- Advertisement -

முதல் பாதி ஆட்டத்தின் போது இறுதி நிமிடத்தில் டூ ஆர் டை சென்ற யூ மும்பா வீரர் அபிஷேக் சிங் இரு புள்ளிகள் எடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தியு யூ மும்பா 33 க்கு 23 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணியை எதிர்த்து பெங்கால் வாரியர்ஸ் மோதியது.

இந்த போட்டியில் 27 க்கு 25 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் வெற்றி பெற்றது. இந்த இரு போட்டிகளுக்கும் முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேசியகீதம் பாடியதோடு ரசிகர்களின் வீரர்களையும் உற்சாகப்படுத்தினார். அப்போது அவர் பேசும்போது :

Kohli 2

புரோ கபடி லீக் தொடங்கியதிலிருந்து கபடி நம் நாட்டில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளாக இருக்கும்போது நாம் விளையாடிய விளையாட்டை இப்போது பார்ப்பது வேறு விதமான அனுபவத்தை தருகிறது. உலக அளவில் இந்திய கபடி அணி மிக சிறப்பாக இருக்கிறது இப்படி கபடி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற இந்திய வீரர்களின் உடல் தகுதியும் மனஉறுதியும் மட்டுமே காரணம் என்று கபடி வீரர்களை கோலி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement