- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக இதை செஞ்சுட்டா.. வாசிம் அக்ரமுக்கு பின் பும்ராவை ஆசியாவின் மகத்தான பவுலரா கொண்டாடுவாங்க.. பாலாஜி

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா சமயத்தில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து தரராக போற்றப்படுகிறார். கடந்த 2016இல் அறிமுகமாகி வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து அசத்திய அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற பேச்சுக்கள் காணப்பட்டன. ஆனால் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் அவர் சமீபத்தில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார்.

அப்படியே 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அப்படி டெஸ்ட் ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதால் தற்சமயத்தில் பும்ரா உலகின் சிறந்த பவுலராக திகழ்வதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் சமீபத்தில் பாராட்டினார்.

- Advertisement -

ஆசியாவின் கிங்:
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் ஜஸ்ப்ரித் பும்ரா ஆசியாவின் சிறந்த பவுலராக கொண்டாடப்படுவார் என்று லக்ஷ்மிபதி பாலாஜி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்த டி20 உலகக் கோப்பை பட்டத்தை இந்தியாவுக்காக பந்து வீசி வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் அவர் ஆசியாவின் 2வது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தனது மரபை உருவாக்குவார்”

“வாசிம் பாய் வேகப்பந்து வீச்சின் பரிணாமத்தை மாற்றியவர். வரலாற்றின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை பெறுவதற்காக ரன்-அப்பில் தங்களுடைய உடலின் கீழ்ப்பகுதியை பயன்படுத்துவதை பார்க்க முடியும். அதனுடன் வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி டென்னிஸ் லில்லி, மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்சல் போன்றவர்கள் அற்புதமான வேகத்தை உருவாக்குவார்கள்”

- Advertisement -

“ஆனால் ஆஸ்திரேலியாவில் அல்லது மேற்கு இந்தியர்களை போல ஆசிரியர்கள் வலுவான கீழ் உடலை கொண்டிருப்பதில்லை. இருப்பினும் பும்ரா, வாசிம் பாய் ஆகிய இருவருமே இந்த விளையாட்டை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்களாக வந்துள்ளனர். அவர்களுடைய மேல் உடல் வலுவாக இருக்கும். அவர்கள் ரன் அப்பில் எதையும் பெறுவதில்லை. மாறாக கை, மணிக்கட்டு, பந்து வீசும் கையின் பலம் ஆகியவற்றாலேயே அவர்கள் அனைத்தையும் பெறுகின்றனர்”

இதையும் படிங்க: கனடா அணிக்கெதிரான போட்டியில் இருந்து நீக்கப்படவுள்ள சீனியர் வீரர் – ரோஹித் சர்மா எடுக்கவுள்ள முடிவு

“இதை வைத்து அவர்கள் துல்லியமான யார்க்கர், வேகம், வேகத்தில் மாற்றம், கோணத்தில் மாற்றம் போன்றவற்றை செய்கின்றனர். அதனால் அவர்கள் பிட்ச்சை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துகின்றனர். எனவே வாசிம் அக்ரமுக்கு அடுத்தபடியாக எங்களுடைய கண்டத்தில் பும்ரா சிறந்தவர். 1999 உலகக்கோப்பை ஃபைனலில் அக்ரம் 3 அடிக்க முடியாத பந்துகளை வீசினார். அந்த வகையில் பும்ரா அடுத்த தசாபத்திற்கான மகத்துவத்தை சேசிங் செய்ய இது சரியான நேரம் என்று கருதுகிறேன். குறிப்பாக தனியாளாக அவர் இந்த உலகக் கோப்பை இந்தியாவிற்கு வென்று கொடுத்தால் அதை செய்வார்” என்று கூறினார்.

- Advertisement -