எல்லாம் ஓகே.. அதுக்குன்னு இப்படியா? ராகுல் டிராவிடுக்கு இந்திய அணியின் வீரர்கள் குடுத்த சர்ப்ரைஸ் – என்ன நடந்தது?

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய அணிக்கு முதன்மை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஐசிசி தொடரை கைப்பற்றவில்லை என்ற குறை மட்டும் நீடித்து வந்தது. அது அவரது பயிற்சி காலத்தில் ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த 2024-ம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் வெற்றியின் மூலம் அந்த குறையும் நிவர்த்தியாகியுள்ளது. இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் இந்த தொடருடன் பதவி விலக இருப்பதாகவும் தொடர்ந்து இந்திய அணி பயிற்சியாளராக நீடிக்கு விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்திய அணியை சாம்பியனாக மாற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து நேற்று ராகுல் டிராவிட் விலகினார்.

ஒரு வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பை கையில் ஏந்தி சாதிக்க முடியாத டிராவிட் தற்போது ஒரு தலைமை பயிற்சியாளராக அந்த கோப்பையை ஏந்தி தனது பல ஆண்டுகால ஏக்கத்தை தனித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் இந்திய அணியின் வீரர்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலி தங்களுக்குள் பேசிக்கொண்டு ராகுல் டிராவிடை கொண்டாட வேண்டும் என திட்டமிட்டனர்.

இதையும் படிங்க : இதுக்காக இந்தியாவுக்கு தலை வணங்குறேன்.. எங்களோட கேரக்டருக்காக பெருமைப்படுறேன்.. மார்க்ரம் பேட்டி

அதனைத்தொடர்ந்து சில நொடிகளிலேயே அவர்கள் இருவரும் பயிற்சியாளராக ராகுல் டிராவிடை தங்களது தோளில் தூக்கினர். பின்னர் மற்ற வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ராகுல் டிராவிடை தலைக்கு மேல் தூக்கி போட்டு அவரை கொண்டாட தொடங்கினர். இந்த கொண்டாட்டம் குறித்த வீடியோவும் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement