ரோஹித் கோலி விடயத்தில் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரச்சனை முடியாது – கவாஸ்கர் ஓபன் டாக்

Gavaskar
- Advertisement -

சமீபத்தில் இந்திய அணி குறித்து பரபரப்பாக பேச வைத்த விடயங்களில் ஒன்று யாதனில் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோருக்கு இடையேயான சண்டை மற்றும் பிரச்சனை தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது என்பதை கோலி ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருந்தார். ஆனாலும் இதுகுறித்த சர்ச்சை ஓயாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

Rohith-1

- Advertisement -

இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் இடையேயான உறவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என் கருத்தில் இது போன்ற விடயங்கள் சுத்த முட்டாள் தனமானது. இதுபோன்ற பொய்களை நாம் கண்மூடித்தனமாக ஊக்குவிக்கக் கூடாது. உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். கோலி மற்றும் ரோஹித் நல்ல நட்போடு இருக்கிறார்கள்.

கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்கு இடையேயான இந்த சர்ச்சை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரச்சனை ஓயாது. ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி நன்றாக இருக்க கூடாது என்று நினைப்பவர் கிளப்பிவிட்ட ஒரு பொய்தான் இது. இந்த கட்டுக்கதையை நாம் நம்பி இருக்கக் கூடாது இந்த விஷயம் ஆனால் சீக்கிரம் முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

Rohith

ஏனெனில் ஒவ்வொரு முறை ரோகித் சர்மா சிறப்பாக செயல்படாத போதும் இனி இந்தக் கட்டுக்கதை உலா வரும் என்பது உறுதி என்று கவாஸ்கர் கூறினார். ஆனால் கோலி மற்றும் ரோஹித் இடையே நல்ல உறவு உள்ளதை பி.சி.சி.ஐ ஏற்கனவே வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement