கோரை பாய். சிமெண்ட் தரை. இதுதான் டிக்கெட் கலெக்ட்டர் தோனி இருந்த அறை – வைரலாகும் அறிய புகைப்படம்

Dhoni-tc-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இந்திய அணிக்கு கேப்டனாக பல ஆண்டுகள் இருந்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் என்றே கூறலாம். தோனியின் தலைமையில் இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளது. மேலும் ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்த ஒரே இந்திய அணியின் கேப்டன் தோனி தான் என்பது நாம் அறிந்ததே.

dhoni

- Advertisement -

தோனியின் இன்றைய உயரம் எவ்வளவு பெரியதோ அதைப் போன்று அவர் முன்னேற்றத்திற்காக பட்ட கஷ்டமும் அவ்வளவு பெரியது என்றே கூறலாம். கடந்த 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிராக முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கிய தோனி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தோனி விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி தேசிய அணிக்கு தேர்வு பெறும் முன்னர் காரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டர் ஆக பணிபுரிந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியே. அதன் பிறகு அவர் தேசிய அணியில் இணைந்து எவ்வளவு உயரத்துக்கு வந்துள்ளார் என்பதனை நாம் பார்த்து வருகிறோம்.

dhoni tc 1

அப்படி மிகப்பெரிய உயரத்தை இன்று தோனி அடைந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை இந்த ஒரு புகைப்படம் உணர்த்துகிறது. டிக்கெட் கலெக்டராக இருந்தபோது அவர் தங்கியிருந்த அறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhoni tc

அதன்படி காரக்பூர் ரயில்வேக்கு சொந்தமான குவாட்ரஸில் தங்கியிருந்த தோனி கோரைப்பாய் சிமெண்ட் தரை மற்றும் ஒரு சிறிய கட்டில் கொண்ட அறையில் தனது நண்பர்களுடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பல கோடியில் சொகுசு வீட்டில் இருந்தாலும் அவரின் கடின உழைப்பே அவரை இந்த இடத்திற்கு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல

Advertisement