- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாத்தான்குளம் படுகொலையை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடந்த கொடுஞ்செயல் – கொதித்தெழுந்த பத்ரிநாத்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகமே ஸ்தம்பித்து உள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் காவலர்களால் நடைபெற்ற இரட்டை படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரரான பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது : “பயம் உண்டாக்கினால் மட்டுமே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். மரண தண்டனை ஒன்றே இதற்குத் தீர்வாகும்” என்று தனது கோபத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் “செதஞ்ச அந்த பச்ச புள்ள உடம்பு பார்த்தாலே பதறுதே”, “பெத்தவங்க எப்படி துடித்து இருப்பாங்க எப்படி இப்படி எல்லாம் பன்னுறீங்க” உலகம் அழியப்போகிறது அழிச்சிகிட்டே இருக்கோம்” நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் அப்படின்னு சும்மா சொல்லிட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ஹர்பஜன் சிங் தனது வேதனையை பதிவாக இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த துயர சம்பவத்திற்கு எதிரான மக்கள் குரலும் வலுவாக எழத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by