இவரை எதுக்கு நம்பி டீம்ல விளையாட வைக்குறீங்க. அவர் சுத்த வேஸ்ட் – தமிழக வீரரை விளாசிய ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் துவங்கும் முன்னரே இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் குறித்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள் குறித்து அவ்வப்போது சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Shankar

- Advertisement -

அந்த வகையில் தற்போது சன்ரைசர்ஸ் அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சன் ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் விஜய் சங்கருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவை சேர்த்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விஜய் சங்கர் இடத்தில் மற்றொரு வீரரை நினைத்து பாருங்கள். இவர் ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சரியாக விளையாடும் ஒரு வீரரை ஒருமுறைதான் இறக்கி விடுகிறார்கள். அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார் அவரை விஜய்சங்கர் இடத்தில் இறக்கலாம்.

shankar

ஆனால் நன்றாக விளையாடாத விஜய் சங்கருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை விஜய் ஷங்கர் இடத்தில் அபிஷேக் ஷர்மாவை இறக்கினால் அவர் பெரிய வீரராக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து மட்டுமின்றி பேட்டிங்கிலும் 8 பந்தில் 8 ரன்கள் மட்டுமே அடித்திருந்தால் விஜய் சங்கரின் இந்த மோசமான செயல்பாட்டை சுட்டிக்காட்டிய அவர் 3டி பிளேயர் விஜய் சங்கர் என்று கிண்டலடித்துள்ளார்.

shankar 1

மேலும் விஜய் சங்கர் இந்த சீசனில் பல போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அது தவிர ஸ்ட்ரைக் ரேட்டும் பெரிய அளவில் இல்லை என்பதை காரணம் சுட்டிக்காட்டி சன் ரைசர்ஸ் அணியில் இருந்து விஜய் ஷங்கரை நீக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement