ஒன்றாக “நீந்துவோம் அல்லது மூழ்குவோம்” சென்னை அணிக்கு தோனி கூடுத்த அட்வைஸ்..!

dhoni
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டிகளில் தோனியின் பழைய செயல்திறன்களை ரசிகர்கள் கண்டு வருகின்றனர். மேலும் தனது சிறப்பான தலைமையின் மூலம் நடந்து முடிந்த 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளது சென்னை அணி. இதனால் ரசிகர்கள் அனைவருமே தோனியின் புராணத்தை பற்றித்தான் பாடி வருகின்றனர்.

mavi

- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக உள்ள தோனி இந்திய அணி யின் கேப்டனாக இருந்த போதே இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வந்தார். மேலும் அவர் கேப்டனாக இருந்து புரிந்த சாதனைகள் ஏறலாம். கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவது மட்டும் அல்லாமல் இக்கட்டான தருணங்களில் முன்னின்று அணியின் வெற்றியை பல முறை உறுதி செய்துள்ளார்.

இருந்தும் தோனி குறித்த பல்வேறு எதிர்மறையான விமர்சங்கங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன் நடந்து வரும் ஐபில் போட்டியில் சென்னை அணியில் ஆடிவரும் ஜடேஜா இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை அப்படி இருந்தும் அவரை என் இன்னும் தோனி அணியில் வைத்துள்ளார் என்று பல்வேறு தரப்பினரும் தோனியை கடிந்து வந்தனர் ஆனால் கடந்த சனிக்கிழமை நடந்த பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தனது 3 விக்கெட் மூலம் அந்த கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜடேஜா .

இதுபற்றி அன்று நடந்த போட்டியில் ஜடேஜா கூறிய போது “3 விக்கெட்டுகளை எடுத்த து எனக்கு மகிழ்ச்சி தான், அதுவும் விராட்டின் விக்கெட் மிகவும் ஸ்பேஷல் தான். எங்கள் அணிக்கு தோனி ஒன்றை எப்போதும் சொல்லிக் கொன்டே இருப்பார் வெற்றியோ தோல்வியோ ஒரு தனிப்பட்ட நபரை மட்டும் குறை சொல்லக் கூடாது, நாம் ஒன்றாக நீந்துவோம் இல்லை ஒன்றாக மூழ்குவோம். இது தான் எங்கள் அணியின் தாரக மந்திராமே. மேலும் தோனியின் இது போன்ற வார்தைகள் தான் எங்கள் அணிக்கு எப்போதும் உற்சாகமிளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement