இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 20) துவங்கியது. இன்றைய போட்டியில் 498 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய தேநீர் இடைவேளை முடிவில் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததுள்ளது. இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் கோலி பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் அனைவராலும் பாராட்டபட்டு வருகிறது.
India's catching in this Test has been top-notch, but none better than this blinder from @imVkohli! ????#KyaHogaIssBaar #ENGvIND LIVE on SONY SIX and SONY TEN 3. #SPNSports pic.twitter.com/3Lqm9NW4Zv
— SPN- Sports (@SPNSportsIndia) August 21, 2018
நாட்டிங்காமில் நடைபெற்ற இந்த போட்டியின் 25வது ஓவரை இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் மொஹமத் சமி வீசினார். அந்த ஒவரின் முதல் பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் அடிக்க முயன்ற போது அது பேட்டில் பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கே எல் ராகுலை நோக்கி சென்றது.
ஆனால், அவரது அருகில் நின்றுகொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் கோலி, அந்த பந்தை லாவகமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத கே எல் ராகுல், விராட் கோலியின் அற்புதமான கேட்சை கண்டு வியந்து போனார். அவர் மட்டுமல்ல அனைவரும் கோலியின் இந்த பாய்ச்சலை கண்டு அசந்து போகினர்.