ஆரவாரமாக சென்னைக்கு கிளம்பிய கோலியின் படை – புகைப்படம் உள்ளே

Kohli
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நாளை மறுதினம் சென்னையில் துவங்குகிறது. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VK and MS

இந்நிலையில் நாளை மறுதினம் சென்னையில் நடக்கவுள்ள போட்டிக்காக சென்னை அணி சென்னையில் உள்ளது. தற்போது பெங்களூரு அணி பெங்களுருவில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டது.

- Advertisement -

இதனை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி புகைப்படமாக எடுத்து தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :

சனிக்கிழமை மாலை துவங்க உள்ள இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிவருகிறது. முதல் போட்டியில் வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

Advertisement