“ரோர் ஆப் த லயன்” தோனி எழுதிய சி.எஸ்.கே கதை – இன்று முதல் ஒளிபரப்பு. எந்த சேனல் தெரியுமா ?

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி கடந்த பல வருடங்களாக சென்னை அணிக்கு தலைமை தாங்கி சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இவரின் தலைமையில் சென்னை அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Dhoni

சென்னை அணி சூதாட்ட புகாரில் சிக்கிய போது சென்னை அணி தடை செய்யப்பட்டு தோனி புனே அணிக்காக விளையாடினார். பின்னர் சென்னை அணியின் தடை நீங்கியதும் மீண்டும் 2018 ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக பதவி ஏற்று அந்த தொடரை வென்று ரசிகர்களுக்கு சமர்ப்பித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தோனியும் சென்னை அணியும் கடந்து வந்த இந்த பாதையை தோனி “ரோர் ஆப் தி லயன்” என்ற பெயரில் நாடகமாக எழுதி உள்ளார். இந்த நாடகத்தை கபீர் கான் என்பவர் இயக்கியுள்ளார். இந்த கதை மொத்தம் 20 நிமிடங்கள் ஓடுமாறு தொகுக்கப்பட்டு மொத்தம் 5 எபிசோடுகளாக ஹாட்ஸ்டார் இல் இன்று முதல் வெளியாகியுள்ளது. இதனை நீங்கள் ஹாட் ஸ்டாரில் கண்டுகளிக்க முடியும். இதோ அந்த அறிவிப்பு வீடியோ :

இந்த நாடகம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த நாடகத்தில் சென்னை அணியின் துவக்க ஆண்டிலிருந்து அதன் தடைக்காலம் மேலும் சென்னை அணியின் ஏற்றம், தாழ்வு என அனைத்தையும் தோனி தான் கண்ட அணியின் முழு தகவலையும் உண்மையாக அவரரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement