தோணியை மிரளவைத்த ரிஷாப் பண்ட்..! ப்ராவோ ஓவரை கிழித்துயெடுத்த தமிழக வீரர் !

shankar
- Advertisement -

நேற்று நடந்த சென்னை மற்றும் டெல்லி சனிக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணையில் வெற்றி பெற்றாலும் அந்த அணி இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் தமிழக வீரரான விஜய் சங்கர் சென்னை அணிக்கு தண்ணி காட்டினார்.நேற்று புனைவில் நடைபெற்ற இந்த முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை குவித்தது. சென்னை சார்பாக வாட்சன் (70), தோனி (51 )ராயிடு(41) என்று ரன்களை குவித்து டெல்லி அணிக்கு ஒரு சவாலான இலக்கை நிர்னையித்தது.

rishabh-pant

- Advertisement -

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆடகக்காரர்கள் பிரிதிவ் ஷா மற்றும் முன்ரோ பவர் பிலே ஓவர்கள் முடிவதற்குள் சொற்ப ரங்களில் அட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் சென்னை அணியின் பந்துகளை தும்சம் செய்தார்.மறுமுனையில் ஆடிவந்த மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பண்டின் ஆட்டத்திற்கு கை கொடுத்த விஜய் சங்கரும் தனது அதிரடி ஆட்டத்தை ஆட துவங்கினர்.

சிறுவர்களும் மாறி மாறி ரன்களை குவித்து வர டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு கூடியது.ஒருகட்டத்தில் ரிஷப் பண்ட் 79 ரன்களில் வெளியேற மற்றொரு புரம் விஜய் ஷங்கர் தனது ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார். 19 வது ஒவேரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட விஜய் ஷங்கர் டெல்லி அணியை வெற்றியின் அருகில் அழைத்து சென்றார். ஒரு கட்டத்தில் கேப்டன் கூல் தோனியும் ஆட்டத்தின் அழுத்தத்தை தாங்க முடியாமல் பந்துவீச்சாளரிடம் சிறுது கடுப்பாகினார்.

Vijay_Shankar

இறுதி ஒவேரில் 28 ரன்கள் தேவை என்று ஆடிய டெல்லி அணியால் 14 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஒருவேளை பண்ட அட்டமிழக்காமல் இருந்திருந்தால் டெல்லி அணியின் கதையே மாறி இருக்கும். இருப்பினும் பண்ட மற்றும் விஜய் ஷங்கரின் ஆட்டம் பாராட்டக்கூடிய ஒரு விஷமாக அமைந்தது.

Advertisement