தோனி பற்றி அப்படி பேசாதீங்க..! ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கோலி..! – காரணம் இதுதான்..?

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியில் தோனியின் பொறுமையான ஆட்டத்தை அனைவரும் கிண்டல் செய்து வந்த நிலையில் தோனி மீதான எழுந்துள்ள இந்த விமர்சனம் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பதிலளித்துள்ளார்.
virat
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 45 ரன்களும், ரெய்னா 46 எடுத்திருந்தனர்.

மேலும் , இந்த போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார். தோனி ரன் குவிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதால் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் தோனி ஆடும் போதெல்லாம் அவரன் ஆட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டு வந்தனர். இறுதியில் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோனியின் இந்த மந்தமான ஆட்டம் குறித்து இந்திய கேப்டன் கோலியிடம் கேட்டபோது “அவர் (தோனி )நினைத்தது போல ஆடமுடியாமல் போனால் மட்டுமே இது போன்ற கேள்விகள் வருகின்றது. அவரை குற்றம் சொல்ல சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் சிறப்பாக விளையாடினால் அவர் ஒரு சிறந்த பினிஷெர். இல்லையென்றால் அவர் மீது விமர்சனத்தை வைப்பார்கள். அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இது ஒரு மோசமான நாள் தான். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement