பங்களாதேஷ் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு. நாளைய டெஸ்ட் போட்டியை ரத்து செய்து ஐ.சி.சி அறிவிப்பு

Terror
- Advertisement -

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை 16ஆம் தேதி ஓவலில் நடைபெற இருந்தது.

nz

- Advertisement -

இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அருகில் துப்பாக்கிசூடு இன்று காலை நடைபெற்றது. இந்த சம்பவத்தின் அருகில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்தமையால் அவர்களுக்கு உயிருக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் வந்தது.

அப்போது அங்கிருந்த காவலர்கள் பங்களாதேஷ் வீரர்களை அங்கிருந்து மீட்டு அவர்களின் ஹோட்டல் அறைக்கு பத்திரமாக அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஐ.சி.சி நிர்வாகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனால், நாளை நடைபெற இருந்த இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ஐ .சி.சி நிர்வாகத்தின் மூலம் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஐ.சி.சி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ பக்கத்திலும் தெரிவித்துள்ளது.

Advertisement