CSK போட்டிகளில் இந்த வீரர் விளையாடாமல் இருந்ததற்கு இதுதான் காரணமாம்…!

muralicsk
- Advertisement -

கடந்த சில காலமாக முரளி விஜய் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். இவரது மோசமான ஆட்டத்தால் இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. நீண்ட கலமாகவே இவர் ஒரு குறைவாக மதிப்பிடபட்ட வீரராகவே இந்திய அணியில் இருந்து வந்தார். ஆனால், தனது முடியால் ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் என்றால் நம்ப முடியுமா.

MuraliVijay1

- Advertisement -

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் இருந்த முரளி விஜய்க்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. துவக்க ஆட்டக்காரரான இவருக்கு , வாட்ஸன் மற்றும் அம்பத்தி ராயுடுவால் அந்த இடம் பறிக்கப்பட்டது. ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 12 ரன்களை குவித்த இவர், மற்ற போட்டிகளில் ரசிகராக தான் அமர்ந்து கொண்டிருந்தார்.

இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் முரளி விஜய் 57 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

murali

சமீப காலமாக முரளி விஜய் நீளமான முடியை வைத்திருந்தார். ஆனால் விஜய் 21 வயதில் அவர் நீளமான முடியை வைத்திருந்ததால் தமிழ் நாடு அணியில் சில காலமாக சேர்க்கப்படாமல் இருந்துள்ளாராம். அப்படி இருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை எந்த அளவிற்கும் பாதிக்கவில்லை என்று இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement