கிரிக்கெட் மைதானத்தில் கட்டி அனைத்து தன் காதலை சொன்ன வாலிபர்..! இளம்பெண் என்ன செய்தார் தெரியுமா..! – வீடியோ உள்ளே

love
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் ஒரு நாள் போட்டி நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் ஜோடிக்கு இடையே சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
eng
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் கூட்டத்தில் தனது காதலியுடன் இருந்த ஒருவர் தனது காதலியிடம் மண்டியிட்டு பரிசு ஒன்றை வழங்கி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.


இந்த கட்சியை மைதானத்தில் இருந்த கேமரா மேன் ஒருவர் படம் பிடிக்க ரசிகர்கள் அனைவருமே பார்த்து ரசித்தனர். இறுதியில் அந்த காதலரின் காதல் கோரிக்கையை ஏற்ற காதலி தனது காதலரை கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறி கொண்டனர். பொதுவாக கால்பந்து போட்டிகளில் போது தான் இது போன்ற சம்பவம்ங்கள் அதிகம் நடைபெரும். ஆனால், முதன் முறையாக கிரிக்கெட் போட்டியின் போது இது போன்ற கல்யாண ப்ரோபோசல் நடைபெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவை நீங்களும் கண்டு களியுங்கள்.

Advertisement