ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் சென்னை அதிரடி வீரர்..! – CSK பின்னடைவா – காரணம் இதுதான் ?

- Advertisement -

இம்மாதம் தொடங்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்குகொள்ள ஐபில் போட்டிகளில் ஆடிவரும் பல்வேறு இங்கிலாந்து வீரர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப உள்ளனர். இதில் தற்போது ஐபில் போட்டிகளில் சென்னை அணியில் ஆடிவரும் மார்க் உட்டும் இங்கிலாந்து செல்லவுள்ளார்.

wood

இந்த மே 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள தற்போது ஐபில் போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களான பேன் ஸ்ட்ரோக், கிறிஸ் வோக்ஸ் மோயின் அலி ஆகிய வீரர்களும் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.

- Advertisement -

இதுபற்றி சென்னை அணியில் விளையாவரும் மார்க் உட் கூறுகையில்” நான் இப்பொது கவுண்டி கிரிக்கெட்டில் தொடரில் டர்ஹாம் அணிக்காக ஆடவுள்ளேன். அதனால் நான் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன். நான் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரில் ஆட பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளேன் ” என்று கூறியுள்ளார்.

Mark-Wood

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவர், இந்த ஐபில் போட்டியில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே பங்குபெற்றுள்ளார். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணி பிலே ஆப் சுற்றில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இவர் சென்னை அணியில் இருந்து விடுபட்டுள்ளது அந்த அணிக்கு சற்று சாறுகளை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement